அண்ணாமலை

singaravelan
நடிப்பு
ரஜினிகாந்த், குஷ்பூ, சரத் பாபு, ரேகா, ராதாரவி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, பிரபாகர், வினு சக்ரவர்த்தி, மனோரமா, வைஷ்ணவி, கரன்

இசை
தேவா

ஒளிப்பதிவு
பி.எஸ். பிரகாஷ்

படத்தொகுப்பு
கணேஷ், குமார்

திரைக்கதை
சுரேஷ் கிருஷ்ணா, சண்முகசுந்தரம்

இயக்கம்
சுரேஷ் கிருஷ்ணா

தயாரிப்பு
ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி

தயாரிப்பு நிறுவனம்
கவிதாலயா புரொடக்சன்ஸ்

வெளீயீடு:
27 ஜூன் 1992

வீடியோ


     அண்ணாமலை 1992ல் ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, சரத் பாபு, ரேகா, ராதாரவி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, பிரபாகர், வினு சக்ரவர்த்தி, மனோரமா, வைஷ்ணவி, கரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

     1987ல் இந்தியில் வெளியான ‘குத்கர்ஸ்’ என்ற படத்தில் மறுஆக்கம் தான் அண்ணாமலை திரைப்படமாகும். இது ஜெப்ரி ஆர்சர் (Jeffrey Archer) எழுதிய கேன் அண்ட் எபெல் (Kane and Abel) என்ற நாவலின் தழுவல் ஆகும்.

     அண்ணாமலை படத்தை இயக்க முதலில் இயக்குநர் வஸந்த் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் வஸந்த தனிப்பட்ட காரணங்களுக்காக படத்தில் இருந்து விலகவே இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

     இப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். பி.எஸ். பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் மற்றும் குமார் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளனர்.

     இப்படம் வெளியான போது தமிழக அரசு அப்போது கொண்டு வந்திருந்த புதிய சட்டத்தின்படி சென்னையில் போஸ்டர் ஒட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இப்படத்தின் வெற்றிச் செய்தியே இப்படத்திற்கு கூடுதல் விளம்பரத்தைப் பெற்றுத்தந்து இப்படம் திரையரங்குகளில் 175 நாள் ஓட வைத்தது. 1995ஆம் ஆண்டு வரை தமிழ் திரையுலக வரலாற்றில் இப்படத்தின் வசூலே சாதனையாகத் திகழ்ந்தது. 1995ஆம் ஆண்டு பாட்ஷா படம் வெளியாகி இந்த சாதனையை முறியடித்தது.

     அண்ணாமலை படம் 1993ல் ‘கொண்டப்பள்ளி ராஜா’ என்ற பெயரில் தெலுங்கிலும், ‘கோகர்ணா’ என்ற பெயரில் 2003ல் கன்னடத்திலும் மறுஆக்கம் செய்யப்பட்டது.

     அண்ணாமலை படம் ஆரம்பித்த போது படத்தில் மனோரமா இல்லை. இருப்பினும் அவர் ஏற்கெனவே ஒப்பந்தமான வேறொரு படம் நிறுத்தப்பட்டதால், அவர் அண்ணாமலை படத்தில் நடிக்க முடிந்தது.

     ஆரம்பத்தில் ராதா ரவி படத்தில் வயதான வேடத்தில் நடிக்க விரும்பவில்லை. இருப்பினும் ரஜினிகாந்தின் விருப்பத்தின் பேரில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

     படத்தில் குஷ்புவின் பெயர் முதலில் குஷ்பு என்றே வைக்கப்பட்டிருந்தது. பின்னரே அது சுப்புலட்சுமி என்கிற சுப்பு என மாற்றப்பட்டது.

     அண்ணாமலை படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள விநாயகர் கோவிலில் ரஜினிகாந்த் தேங்காய் உடைக்கும் காட்சியுடன் ஆரம்பமானது.

     படத்தில் ரஜினியின் அறிமுக பாடலான ‘வந்தேண்டா பால்காரன்’ பாடல் ஊட்டியில் படமாக்கப்பட்டது. இப்பாடலுக்கு நடன இயக்குநர் பிரபு தேவா.

     லேடீஸ் ஹாஸ்டலில் பாம்புடன் ரஜினி நடிக்கும் காட்சி ஆழ்வார்பேட்டையில் உள்ள சக்ரா இல்லத்தில் எடுக்கப்பட்டது. இக்காட்சியில் பாம்புடன் ரஜினியின் நடிப்பு மிகுவும் தத்ரூபமாக இருந்தது. ஆனால் காட்சி முடிந்த பின்னரே தெரிய வந்தது, பாம்புக்கு வாய் தைக்கப்படவில்லை என்பது.

     ஒரு காட்சியில் அண்ணாமலையும் அசோக்கும் எஸ்கலேட்டரில் மேலும் கீழுமாக வருவார்கள். அந்த சமயத்தில் சென்னையில் எந்த ஹோட்டலிலும் எஸ்கலேட்டர் வசதி இல்லாததால், அந்த காட்சி பாம்பேயில் உள்ள சென்டர் ஹோட்டலில் படமாக்கப்பட்டது.

     மொத்த படத்தின் படப்பிடிப்பும் 45 நாட்களில் நிறைவடைந்தது. இப்படத்தில் முதன் முதலாக டைட்டிலில் ‘Super Star RAJINI’ என்ற வார்த்தையை வெளியானது.

     ஆரம்பத்தில் படத்தின் நீளம் 14950 அடியாக (4560 மீ) இருந்தது. பின்னர் அது 14500 அடியாக (4,400 மீ) குறைக்கப்பட்டு, படம் 2 மணி 45 நிமிடம் ஓடக் கூடியதாக மாற்றியமைக்கப்பட்டது.

*****
பாடல்கள்
1. வந்தேண்டா பால்காரன்
படம் : அண்ணாமலை (1992)
பாடியவர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
இசை : தேவா
இயற்றியவர் : வைரமுத்து

வீடியோ


இன்னும் என்னை
என்ன செய்யப் போகிறாய்
அன்பே அன்பே...

என்னைக் கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே

கைகள் தானாய் கோர்த்தாய்
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
இன்பம் இன்பம் சிருங்கார லீலா

இன்னும் என்னை
என்ன செய்ய போகிறாய்
அன்பே அன்பே...

என்னை கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே

பாடி வரும் வான் மதியே
பார்வைகளின் பூம்பனியே
தேவ சுகத் தேன் கனியே
மோக பரிபூரணியே

பூவோடு தான் சேர
இளங்காற்று போராடும் போது
சேராமல் தீராது
இடம் பார்த்து
தீர்மானம் போடு
புது புது விடுகதை
தொடத் தொடத் தொடர்கிறதே...

இன்னும் என்னை
என்ன செய்ய போகிறாய்
அன்பே அன்பே...

என்னை கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே...

உன்னைச் சேர்ந்தாள் பாவை
இன்னும் அங்கு ஏதோ தேவை
சொல்லு சொல்லு சிங்கார வேலா...

தேன் கவிதை தூது விடும்
நாயகனே மாயவனே
நூலிடையை ஏங்க விடும்
வான் அமுத சாகரனே

நீதானே நான் பாடும்
சுகமான ஆகாசவாணி
பாடாமல் கூடாமல்
உறங்காது ரீங்காரத் தேனீ

தடைகளை கடந்து நீ
மடைகளை திறந்திட வா...

இன்னும் என்னை
என்ன செய்ய போகிறாய்
அன்பே அன்பே...

ஆஹா!
என்னை கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே

கைகள் தானாய் கோர்த்தாய்
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்

சொல்லு சொல்லு சிங்கார வேலா

இன்னும் என்னை
என்ன செய்ய போகிறாய்
அன்பே அன்பே...

என்னை கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே... அன்பே...