ஒரு தலை ராகம் நடிப்பு
சங்கர், ரூபா, உஷா ராஜேந்தர், தியாகு, சந்திரசேகர், ரவீந்திரன்பாடல்கள்
டி.ராஜேந்தர்இசை
டி.ராஜேந்தர்பின்னணி இசை
ஏ.ஏ.ராஜ்ஒளிப்பதிவு
ராபர்ட் ராஜசேகரன்கதை
டி.ராஜேந்தர்படத்தொகுப்பு
டி.ராஜ்இயக்கம், தயாரிப்பு
ஈ.எம்.இப்ராகிம்தயாரிப்பு நிறுவனம்
மன்சூர் கிரியேசன்ஸ்வெளீயீடு: மே 2, 1980 ***** பாடல்கள்
1. இது குழந்தை பாடும் தாலாட்டு
படம் : ஒரு தலை ராகம் (1980) இசை : டி.ராஜேந்தர் பாடலாசிரியர்: டி.ராஜேந்தர் பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் வீடியோ இது இரவு நேர பூபாளம் இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம் இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம் இது நதியில்லாத ஓடம் நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தை பார்க்கிறேன் வடம் இழந்த தேரது ஒன்றை நாள்தோரும் இழுக்கிறேன் சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன் சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன் உறவுராத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன் இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் வெறும் நாரில் கரம் கொண்டு பூ மாலை தொடுக்கிறேன் வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன் விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன் விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன் விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன் இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது உறவுருவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது உயிரிழந்த கருவை கொண்டு கவிதை நான் வடிப்பது உயிரிழந்த கருவை கொண்டு கவிதை நான் வடிப்பது ஒரு தலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது? இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம் இது நதியில்லாத ஓடம் *****
2. வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது
படம் : ஒரு தலை ராகம் (1980) இசை : டி.ராஜேந்தர் பாடலாசிரியர்: டி.ராஜேந்தர் பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் வீடியோ வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது வைகை இல்லா மதுரை இது மீனாட்க்ஷியை தேடுது ஏதேதோ ராகம் என்னாளும் பாடும் அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா உனக்கேன் ஆசை நிலவவள் மேலே மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை உனக்கேன் ஆசை கலைமகள் போலே மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை உனக்கேன் ஆசை கலைமகள் போலே வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து உனக்கேன் ஆசை ரதியவள் மேலே வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும் உனக்கேன் ஆசை மன்மதன் போலே வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும் உனக்கேன் ஆசை மன்மதன் போலே வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம் உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே உனக்கேன் ஆசை உறவென்று நாட மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே உனக்கேன் ஆசை உறவென்று நாட வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது வைகை இல்லா மதுரை இது மீனாக்ஷியை தேடுது ஏதேதோ ராகம் என்னாளும் பாடும் அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது *****
3. கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு
படம் : ஒரு தலை ராகம் (1980) இசை : டி.ராஜேந்தர் பாடலாசிரியர்: டி.ராஜேந்தர் பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் & குழுவினர் வீடியோ கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு என்னாடி பொருத்தம் ஆயா எம்பொருத்தம் இதைப் போலா தாளமில்லாப் பின்பாட்டு ஆஹா... தாளமில்லாப் பின்பாட்டு கத்து கிட்டா எங்கூத்து என்னுயிர் ரோசா எங்கடி போறே மாமலர் வண்டு ஆடுது இங்கு அம்மாளே அம்மாளே... பொழுதோட கோழி கூவுற வேளை ராசாதி ராசன் வாராண்டி முன்னே பொழுதோடகோழி கூவுற வேளை ராசாதி ராசன் வாராண்டி முன்னே அல்லி வட்டம் புள்ளி வட்டம் நானறிஞ்ச நிலா வட்டம் அல்லி வட்டம் புள்ளி வட்டம் நானறிஞ்ச நிலா வட்டம் பாக்குறது பாவமில்லே புடிப்பது சுலபமில்லே புத்தி கெட்ட விதியாலே ஆஹா... புத்தி கெட்ட விதியாலே போறவதான் எம்மயிலு என்னுயிர் ரோசா எங்கடி போறே மாமலர் வண்டு ஆடுது இங்கு அம்மாளே அம்மாளே... பொழுதோட கோழி கூவுற வேளை ராசாதி ராசன் வாராண்டி முன்னே பொழுதோட கோழி கூவுற வேளை ராசாதி ராசன் வாராண்டி முன்னே ஆயிரத்தில் நீயே ஒண்ணு நானறிஞ்ச நல்ல பொண்ணு ஆயிரத்தில் நீயே ஒண்ணு நானறிஞ்ச நல்ல பொண்ணு மாயூரத்துக் காளை ஒண்ணு பாடுதடி மயங்கி நின்னு ஓடாதடி காவேரி ஆஹா... ஓடாதடி காவேரி உம்மனசில் யாரோடி என்னுயிர் ரோசா எங்கடி போறே மாமலர் வண்டு ஆடுது இங்கு அம்மாளே அம்மாளே... பொழுதோட கோழி கூவுற வேளை ராசாதி ராசன் வாராண்டி முன்னே பொழுதோட கோழி கூவுற வேளை ராசாதி ராசன் வாராண்டி முன்னே என்னுயிர் ரோசா எங்கடி போறே மாமலர் வண்டு ஆடுது இங்கு அம்மாளே அம்மாளே அம்மாளே அம்மாளே... *****
4. கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்
படம் : ஒரு தலை ராகம் (1980) இசை : டி.ராஜேந்தர் பாடலாசிரியர்: டி.ராஜேந்தர் பாடியவர்கள் : பி.ஜெயசந்திரன் வீடியோ கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம் முகாரி ராகம் முகாரி ராகம் கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம் முகாரி ராகம் கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் முந்தானை பார்த்து முந்நூறு கவிதை எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி முந்தானை பார்த்து முந்நூறு கவிதை எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி முன்னாடி அறியா பெண்மனதை கேட்டு அன்புண்டு வாழும் காளையர் கோடி ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும் அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும் கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம் முகாரி ராகம் கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் கிணற்றுக்குள் வாழும் தவளையைப் போல மனதுக்குள் ஆடும் ஆசைகள் கோடி கிணற்றுக்குள் வாழும் தவளையைப் போல மனதுக்குள் ஆடும் ஆசைகள் கோடி கண்கெட்ட பின்னே சூரிய உதயம் எந்த பக்கம் ஆனால் எனக்கென்ன போடி ஒருதலை ராகம் எந்த வகையினில் சாரும் அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும் கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம் முகாரி ராகம் முகாரி ராகம் முகாரி ராகம் *****
5. மீனா ரீனா சீதா கீதா ராதா வேதா
படம் : ஒரு தலை ராகம் (1980) இசை : டி.ராஜேந்தர் பாடலாசிரியர்: டி.ராஜேந்தர் பாடியவர்கள் : ஜாலி ஏபிரகாம் வீடியோ அட நம்ம பார்வதி வராடா அடடா அடடா பாத்துக்கோடா சேய்வோலே காமாந்தகா துட்சா ரோட்ல பெண்களே நடமாட முடியலைடா உங்க கண் பட்டாலே கர்ப்பம் உண்டாகிடும் போல இருக்கே உங்க சதையெல்லாம் துரு பிடிக்க போரதுடா நீங்க எல்லாம் நல்ல இருப்பேளா உங்கள எல்லாம் ஈஸ்வரன் தாண்ட ரட்சிக்கணும் என்ன சொன்னேள் ஈஸ்வரன் ரட்சிக்கணுமா எங்கள அந்த மன்மதன் ரட்சித்தாலே போதுமே அட மன்மதன் ரட்சிக்கணும் இந்த மங்கையர் காளைகளே மங்கையை மயக்கும் மந்திர பூஜை என்னென்ன சொல்லடா இளம் பெண்களை வெல்லடா அட மன்மதன் ரட்சிக்கணும் இந்த மங்கையர் காளைகளே மங்கையை மயக்கும் மந்திர பூஜை என்னென்ன சொல்லடா இளம் பெண்களை வெல்லடா மாடி வீட்டு லலிதா மயங்கி நின்னா அழக கோடி வீட்டு கீதா குலுங்கிகிட்டே சிரிச்ச கோவலன் கண்ட அந்த கால மாதவி நான் கேவலம் என்பேன் உந்தன் முன்னே மாலதி எச்சில் ஊர பாதுஷா ஏங்க வைக்கும் என் உஷா அட நிம்மிய கண்டா கும்மியடிப்பேன் ரம்மிய கண்டு வெம்பி வெடிப்பேன் அட நிம்மிய கண்டா கும்மியடிப்பேன் ரம்மிய கண்டு வெம்பி வெடிப்பேன் நளினத்தைக் காட்டும் நளினி நலுங்காமல் வருவதை கவனி ரசனையை தூண்டும் ரதி நீ நாள்தோரும் வருவேன் பவனி நான் நாள்தோரும் வருவேன் பவனி கவிதையிலே வாழ்ந்து வரும் கவிதா என் ராகத்திலே மயங்கி வாடி ராதா கவிதையிலே வாழ்ந்து வரும் கவிதா என் ராகத்திலே மயங்கி வாடி ராதா அட பக்கத்து வீட்டு பைங்கிளி என் சொர்கத்தை காட்டும் சுந்தரி அட பக்கத்து வீட்டு பைங்கிளி என் சொர்கத்தை காட்டும் சுந்தரி பிரேமலதா உன் பிரம்மை சதா பிரேமலதா உன் பிரம்மை சதா உறக்கும் இல்லை சுதா இரக்கம் காட்டேன் ஷீலா மறக்க மாட்டேன் லீலா நீலாம்பரி ராகம் உனக்காக நீலா ஒன்றும் சொல்லாமல் போவாயோ என் கலா நீலாம்பரி ராகம் உனக்காக நீலா ஒன்றும் சொல்லாமல் போவாயோ என் கலா அட கலா சந்திக்கத் துடிக்கும் சாந்தி நிந்திக்க நினைப்பாள் ஜயந்தி இடையினில் கிடைத்தால் வசந்தி நான் எவளிடம் போவேன் மயங்கி நான் எவளிடம் போவேன் மயங்கி நான் எவளிடம் போவேன் மயங்கி *****
6. என் கதை முடியும் நேரமிது
படம் : ஒரு தலை ராகம் (1980) இசை : டி.ராஜேந்தர் பாடலாசிரியர்: டி.ராஜேந்தர் பாடியவர்கள் : டி. எம். சௌந்தரராஜன் வீடியோ என்பதை சொல்லும் ராகமிது என் கதை முடியும் நேரமிது என்பதை சொல்லும் ராகமிது அன்பினில் வாழும் உள்ளமிது அணையே இல்லா வெள்ளமிது அன்பினில் வாழும் உள்ளமிது அணையே இல்லா வெள்ளமிது இதயத்தில் ரகசியம் இருக்கின்றது அது இதழினில் பிறந்திட தவிக்கின்றது உலகத்தை என் மனம் வெறுக்கின்றது அதில் உறவென்று அவளை நினைக்கின்றது உலகத்தை என் மனம் வெறுக்கின்றது அதில் உறவென்று அவளை நினைக்கின்றது பேதமை நிறைந்தது என் வாழ்வு அதில் பேதையும் வரைந்தது சில கோடு பித்தென்று சிரிப்பது உள் நினைவு அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு பித்தென்று சிரிப்பது உள் நினைவு அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே அதில் பிரிவுகள் என்பது இருக்காதே ஒளியாய் தெரிவது வெறுங் கனவு அதன் உருவாய் எரிவது என் மனது ஒளியாய் தெரிவது வெறுங் கனவு அதன் உருவாய் எரிவது என் மனது ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள் உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள் துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள் துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள் துயர் கடலினை படைக்கும் நீர் தந்தாள் ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள் உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள் *****
7. நான் ஒரு ராசியில்லா ராஜா
படம் : ஒரு தலை ராகம் (1980) இசை : டி.ராஜேந்தர் பாடலாசிரியர்: டி.ராஜேந்தர் பாடியவர்கள் : டி. எம். சௌந்தரராஜன் வீடியோ என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா ஆயிரம் பாடட்டும் மனது என் ஆசைக்கு இல்லை உறவு நான் ஒரு ராசியில்லா ராஜா என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா பாட்டிசைக்க மேடை கண்டேன் ராகங்களைக் காணவில்லை பாட்டிசைக்க மேடை கண்டேன் ராகங்களைக் காணவில்லை பலர் இழுக்க தேரானேன் ஊர்வலமே நடக்கவில்லை கண்ணிரண்டும் மிதக்கட்டும் நீரினிலே கையிரண்டும் போடட்டும் தாளங்களே கண்ணிரண்டும் மிதக்கட்டும் நீரினிலே கையிரண்டும் போடட்டும் தாளங்களே நான் ஒரு ராசியில்லா ராஜா என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா என்கதையை எழுதிவிட்டேன் முடிவினிலே சுபமில்லை என்கதையை எழுதிவிட்டேன் முடிவினிலே சுபமில்லை இயன்றவரை வாழ்ந்துவிட்டேன் மனதினிலே சாந்தியில்லை தோல்விதனை எழுதட்டும் வரலாறு துணைக்கென்று இனிமேல் யார் கூறு தோல்விதனை எழுதட்டும் வரலாறு துணைக்கென்று இனிமேல் யார் கூறு நான் ஒரு ராசியில்லா ராஜா என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா ஆயிரம் பாடட்டும் மனது என் ஆசைக்கு இல்லை உறவு நான் ஒரு ராசியில்லா ராஜா என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா |
|
|
|