|
|
நிழல்கள் ![]() நடிப்பு
நிழல்கள் ரவி, சந்திரசேகர், ராது (ரோஹினி), ராஜசேகர்பாடல்கள்
வாலி, கங்கைஅமரன், வைரமுத்துஇசை
இளையராஜாஒளிப்பதிவு
B.கண்ணன்கதை, வசனம்
மணிவண்ணன்திரைக்கதை, இயக்கம்
பாரதிராஜாதயாரிப்பு நிறுவனம்
மனோஜ் கிரியேசன்ஸ்வெளீயீடு: நவம்பர் 6, 1980 வீடியோ இத்திரைப்படத்தில் ராஜசேகரன், ரோகிணி, ரவி, சந்திரசேகர், சுவிதா, சாருஹாசன், மணிவண்ணன், ஜனகராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். கோபியும் ஹரியும் வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள். இருவரும் சென்னையில் ஒரே அரையில் தங்கியிருக்கிறார்கள். கோபி வேலை தேடுகிறார், ஹரி மியூசிக் கம்போசராக முயற்சி செய்கிறார். இருவரும் தங்களின் நண்பர்களின் உதவியுடம் நாட்களை கடத்துகிறார்கள். அவர்களின் பக்கத்து அறையில் கல்லூரி மாணவர் பிரபு தங்கியிருக்கிறார். சிகரெட் புகைப்பது, படம் வரைவது, பாடுவது என பொழுதை கழிக்கிறார் பிரபு. இவர்கள் மூவரும் வசிக்கும் குடியிருப்பிற்கு ஒரு குடும்பம் புதிதாக குடிவருகிறது. அந்த குடும்பத்தில் ஒருவர் மஹா என்ற கல்லூரி மாணவி. அவர் பிரபு படிக்கும் அதே கல்லூரியில் படிக்கிறார். இருவரும் நண்பர்களாகிறார்கள். பிரபு வீணை வகுப்பில் சேர விரும்புகிறார். ஆனால் அவர் துரதிர்ஷ்டம் அவர் சேருவதற்கு முன்பே விணை குரு இறந்துவிடுகிறார். கோபி மஹாவிற்கு டியூசன் எடுக்கிறார். இருவரும் காதலில் விழுகிறார்கள். இதற்கிடையே கோபி, ஹரி, பிரபு மூவரும் சில காரணங்களுக்காக கைது செய்யப்படுகிறார்கள். மஹா அவர்களை ஜாமீனில் எடுக்கிறாள். பிரபு கல்லூரியில் இருந்து நீக்கப்படுகிறார். இதனால் பிரபுவின் தந்தை அவரை திட்டுகிறார். பிரபுவுக்கு ஆதரவாக மஹா வாதாடுகிறார். இதை பிரபு காதல் என தவறாக நம்புகிறார். இதனிடையே மஹாவுக்கும் கோபிக்கும் இடையே காதல் என உறவினர்கள் சந்தேகப்பட்டு மஹாவின் பெற்றோரிடம் கூறவே அவர்கள் மஹா டியூசன் செல்வதை நிறுத்துகின்றனர். இதனிடையே ஹரி இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி முன்பணமும் பெறுகிறார். அந்தப் பணத்தைக் கொண்டு அடகு வைத்த மஹாவின் செயினை திருப்பித் தருகிறார்கள். மஹாவின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள். மஹா கோபியை சந்தித்து வேலை தேடும்படி சொல்கிறார். அப்போதுதான் அவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடியும் என்று எடுத்துச் சொல்கிறார். பைனான்சியர் புது இசையமைப்பாளரை விரும்பாததால் ஹரி படத்திலிருந்து விலக்கப்படுகிறார். வீட்டு வாடகை கொடுக்காததினால் வீட்டு உரிமையாளர் கோபியையும் ஹரியையும் வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். இருவரும் ரிக்ஷா தொழிலாளி மணி வீட்டில் தஞ்சமடைகிறார்கள். கோபியின் தந்தை மரணமடைந்ததாக தந்தி வருகிறது. ஊருக்குப் போக காசில்லாததால், காசு பெற்று வர வெளியே செல்லும் மணியின் மகன் சிங்கம் விபத்தில் சிக்குகிறான். ஹரி கடற்கரையில் பாட்டு பாடி காசு திரட்ட முயல்கிறான். கோபி வட்டிக்காரனை அணுகி பணம் பெற முயலுகிறான். வட்டிக்காரன் சிங்கத்தைப் பற்றி தவறாகப் பேச கோபம் கொண்ட கோபி அவனைக் கத்தியால் குத்திவிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு வருகிறான். ஆனால் அதற்குள் சிங்கம் இறந்துவிடுகிறான். ஆனால் மஹா கத்தியை எடுத்து தன் அருகில் நெருங்கினால் தன்னை மாய்த்துக் கொள்வேன் என்று மிரட்டுகிறாள். இதனால் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகும் பிரபு அந்த கத்தியை எடுத்து தன்னைத் தானே குத்திக் கொள்கிறான். அதே நேரம் கோபி மஹா வீட்டிற்கு வந்து, வட்டிக்கடைக்காரனை கொன்றுவிட்ட விஷயத்தை தெரிவிக்கிறான்.இருவரும் ஒரு முடிவு எடுத்து திருமணம் செய்து கொள்கிறார்கள். பிரபுவின் கொலைக்காக அடுத்த நாள் இருவரும் கைது செய்யப்படுகிறார்கள். ஹரி ஹார்மோனியத்தை கடலில் வீசியெறிந்துவிட்டு பைத்தியமாகத் திரிகிறார். கோபியாக நிழல்கள் ரவியும், மஹாலட்சுமியாக (மஹா) ரோஹிணி எனும் ராதுவும், ஹரியாக சந்திரசேகரும், பிரபுவாக ராஜசேகரும் நடித்துள்ளனர். ரவி, சந்திரசேகர், ரோஹிணி மற்றும் ராஜசேகர் ஆகிய நால்வரும் புதுமுகங்கள். இப்படத்தில் தான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேருகிறார் மணிவண்ணன். ‘நிழல்கள்’ திரைப்படத்தின் கதை - வசனம் மணிவண்ணனுடையதுதான். நிறம் மாறாத பூக்கள் படத்தின் ஹீரோ விஜயனுக்கு டப்பிங் பேச முதலில் ரவியை அழைத்த பாரதிராஜா, பின்னர் தானே டப்பிங் பேசுகிறார். இருப்பினும், தனது அடுத்த படத்தில் கதாநாயகனாக வாய்ப்பளிக்கிறார். இதன் மூலம் ரவி, ‘நிழல்கள்’ ரவியாக பரிணமிக்கிறார். கதாநாயகியான ரோகிணியின் அசல் பெயர் ராது. இவர் தமிழில் இரண்டு படம், மலையாளத்தில் இரண்டு படம் என மொத்தமே நான்கு படங்களில் தான் நடித்துள்ளார். ‘நிழல்கள்’ தான் அறிமுகப்படம். பணத்தாசை பிடித்த அடகுக்கடை ஆசாமியாக ஜனகராஜும், “இந்த அப்பனோட சாவுக்கு வர்றதுக்குக் கூட பணமில்லாம நீ அவஸ்தைப் படப் போறடா” என்று வசனம் பேசி நம்மை கவர்ந்து விடும் கே. கே. சௌந்தரும், ரிக்ஷா ஓடுபவராக மணிவண்ணனும் இப்படத்தில் அபாரமாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு நடிகர் கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டில் படமாக்கப்பட்டது. பாரதிராஜா, B. கண்ணன் என்கிற ஒளிப்பதிவாளருடன் கூட்டணி சேர்ந்த முதல் திரைப்படம் ‘நிழல்கள்’. அதன் பின்னர் சுமார் 40 ஆண்டுகள் பாரதிராஜாவுடன் இணைந்து பயணித்த B.கண்ணன் சமீபத்தில்தான் மறைந்தார். படத்திற்கு பின்னணி இசையுடன், இசையமைத்துள்ளார் இளையராஜா. இப்படத்தின் நான்கு பாடல்களும் ஆயிரம் முறை கேட்டாலும் கூட சலிக்காதவை. எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி, தீபன் சக்ரவர்த்தி, உமாரமணன் மற்றும் இளையராஜா பாடல்களைப் பாடியுள்ளனர். பஞ்சு அருணாசலம், வாலி, கங்கை அமரன் மற்றும் வைரமுத்து இப்படத்திற்கு பாடல்களை எழுதியுள்ளனர். ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது’ பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். இப்படத்தில் தான் வைரமுத்து பாடலாசிரியராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இன்றைக்கும் கூட பல கைப்பேசிகளில் ரிங்டோனாக இப்பாடல் இருக்கிறது. பஞ்சு அருணாசலம் எழுதிய ‘தூரத்தில் நான் கண்ட உன் முகம்’ பாடலை , எஸ். ஜானகி பாடியிருந்தார். இந்தப் பாடல் படத்தில் இடம் பெறாதது மிகவும் துரதிர்ஷ்டமானது. வாலி எழுதிய ‘மடை திறந்து’ பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். இப்பாடலின் பல்லவியை மணிவண்ணன் எழுதியிருந்தார். இப்பாடல் ஐரோப்பிய சினிமாக்களின் பாணியில் மிக ஸ்டைலிஷாக உருவாக்கப்பட்டிருக்கும். கங்கை அமரன் எழுதிய ‘பூங்கதவே தாழ்திறவாய்’ பாடலை தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன் இணைந்து பாடி இந்தப் பாடலின் வசீகரத்தை கூட்டியிருந்தனர். கே.பாலச்சந்தரின் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்துடன் சேர்ந்து இந்த படம் வெளியானது. இரு படங்களும் வேலையில்லா திண்டாட்டம் என்ற ஒரே கருவுடன் வெளிவந்தன. ‘வறுமையின் நிறம் சிகப்பு’ வெற்றிப் படமானது, ‘நிழல்கள்’ தோல்வியடைந்தது. பாலச்சந்தரின் திறமையான திரைக்கதை, கமல, ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இருந்த காரணத்தினால் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படம் வெற்றி பெற்றது. ஆனால் ‘நிழல்கள்’ திரைப்படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் இறுதியில் தோற்றுப் போகின்றனர். தோல்வியடைந்தவர்களின் சதவிகிதம்தான் இங்கு அதிகம் என்றாலும், வெற்றி பெற்றவர்களின் வரலாற்றை மகிழ்ச்சியுடன் கவனிக்கும் நாம், தோல்வியுற்றவர்களின் கதைகளை திரும்பிப் பார்க்க விரும்புவதில்லை. அதனால் தான் நிழல்கள் படம் தோல்வியுற்றதோ என்று எண்ணத் தோன்றுகிறது. வேலையில்லாத் திண்டாட்ட பிரச்னையைப் பற்றி இந்தப் படம் பேசினாலும், அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் போகிற போக்கில் சொன்னது. விவசாயம் உள்ளிட்ட பல பணிகளை கௌரவக் குறைச்சலாகக் கருதி ‘வொயிட் காலர்’ பணியை இளைஞர்கள் தேடித் திரிவதே வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு ஒரு காரணம். அதனையே “இல்லாத மரியாதையைக் காப்பாத்தறதுக்கு இருக்கற வாயை பூட்டு போட்டுக்கிட்டு வாழற பட்டணத்து பொழப்பு தேவைதானா?” என்று ரவியின் தந்தை கேட்பார். ரிக்ஷாக்காரர் மணியின் பையனாக நடித்திருக்கும் ஹாஜா ஷெரீஃப் “இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடலை, பொழக்கிறதுக்கு ஆயிரம் வேலை இருக்கு” என்று தன்னம்பிக்கையுடன் பேசுவான். அந்தச் சிறுவனிடம் இருந்த நம்பிக்கை கூட இளைஞர்களிடம் இல்லாததுதான் அவர்களின் சோகமான முடிவிற்கு ஒரு வகையில் காரணமாக இருக்கலாம். இப்படத்தின் தோல்வியை மாற்ற எண்ணிய இளையராஜா ‘பாவலர் கிரியேஷன்ஸ்’ என்ற பெயரில் சொந்தப் படக் கம்பெனியைத் தொடங்கி அதே குரூப்பை வைத்து தயாரித்த படம்தான், ‘அலைகள் ஓய்வதில்லை’. இயக்குனராக பாரதிராஜா, கதை ஆசிரியராக மணிவண்ணன், பாடலாசிரியராக வைரமுத்து, தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளராக இளையராஜா என அந்தப் படம் எல்லோருக்கும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது என மனோபாலா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். 1981ஆம் ஆண்டு பன்னாட்டு இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 21 திரைப்படங்களில் நிழல்கள் படமும் ஒன்றாகும். அந்த விழாவில் திரையிடப்பட்ட மற்றொரு தமிழ் திரைப்படம் அதே 1980ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி வெளியான கே.விஜயனின் ‘தூரத்து இடி முழக்கம்’ ஆகும். 1981ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில திரை விருதுகளில் நிழல்கள் படம் இரு விருதுகளை வென்றது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது இளையராஜாவுக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருது எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும் கிடைத்தது. இன்றளவும் சிறந்த தமிழ் படங்களின் பட்டியலில் ‘நிழல்கள்’ படம் இடம்பெற்றாலும், அப்படம் வெளிவந்த சமயத்தில் அது வெற்றிப்படமாக திகழவில்லை என்பது சோகமே. ***** பாடல்கள்
1. பொன் மாலை பொழுது
படம் : நிழல்கள் (1980) இசை : இளையராஜா பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் வீடியோ பொன் மாலைப் பொழுது இது ஒரு பொன் மாலைப் பொழுது வான மகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள் இது ஒரு பொன் மாலைப் பொழுது ம்ஹும் ஹே ஹா ஹோ ஹுஹுஹும் ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வானம் இரவுக்கு பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும் பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ இது ஒரு பொன் மாலைப் பொழுது வான மகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள் இது ஒரு பொன் மாலை பொழுது வானம் எனக்கொரு போதி மரம் நாலும் எனக்கது சேதி தரும் வானம் எனக்கொரு போதி மரம் நாலும் எனக்கது சேதி தரும் ஒரு நாள் உலகம் நீதி பெரும் திருநாள் நிகழும் தேதி வரும் கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன் இது ஒரு பொன் மாலைப் பொழுது வான மகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள் இது ஒரு பொன் மாலைப் பொழுது ஹஹா ஹே ஹோ ஹா லலலா ம்ஹும் ஹே ஹோ ஹா ம்ஹுஹும் *****
2. மடை திறந்து தாவும் நதியலை நான்
படம் : நிழல்கள் (1980) இசை : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் வீடியோ தனனன்னனா ம்ம்ம் தனனன்னனா ம்ம்ம் தலலல்லலா தால லல்லல்லா தலலல்லலா தால லல்லல்லா தலலல்லலா தலாலல்ல லாலல்ல தலல லலா லா மடை திறந்து தாவும் நதியலை நான் மனம் திறந்து கூவும் சிறு குயில் நான் இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது ஹோய் தானனனனா நானனனனா தானனனனா நானனனனா ஹேய் ஹேய் பபப்ப பாப்பா பபப்ப பாப்பா பாப்பு பூப்பூப்பூ பாபபப்ப பாபபப்ப பப்பா பப்பா பப்பா பபப்ப பப்பா பப்பா பப்பா காலம் கனிந்தது கதவுகள் திறந்தது ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே ஹோய் புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே விரலிலும் குரலிலும் சுவரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான் மடை திறந்து தாவும் நதியலை நான் மனம் திறந்து கூவும் சிறுகுயில் நான் இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது ஹோய் ல ல லி லாலி லாலி லாலி லாலி லாலி லா லலலோலி லலலோலி லலலோலி லலலோ லலலோலி லலலோலி லலலோலி லலலோ லலலோலி லலலோலி லலலோலி லலலோ லலலோலி லலலோலி லலலோலி லலலோ நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம் இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம் வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்களம் வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்களம் இசைக்கென்ன இசைக்கின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான் மடை திறந்து தாவும் நதியலை நான் மனம் திறந்து கூவும் சிறு குயில் நான் இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது ஹோய் லலலலல்லா லால்ல லலலலல்லா லலலலல்லா லால்ல லலலலல்லா *****
3. பூங்கதவே தாழ் திறவாய்
படம் : நிழல்கள் (1980) இசை : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் பாடியவர்கள் : தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன் வீடியோ பூங்கதவே தாழ் திறவாய் பூவாய் பெண் பாவாய் பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய் பூங்கதவே தாழ் திறவாய் நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம் ஆஹாஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாரம் காதல் தெய்வம் தான் வாழ்த்தும் காதலில் ஊறிய ராகம்..ம்ம்... பூங்கதவே தாழ் திறவாய் பூவாய் பெண் பாவாய் திருத்தேகம் ம்ம்ம்... எனக்காகும் ம்ம்ம்... தேனில் நனைந்தது என் உள்ளம் ம்ம்ம்... பொன்னாரம் ம்ம்ம்... பூவாடை ம்ம்ம்... ஆடும் தோரணம் எங்கெங்கும் ம்ம்ம்... மாலை சூடும் அந்நேரம் மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்ம்... பூங்கதவே தாழ் திறவாய் பூங்கதவே தாழ் திறவாய் பூவாய் பெண் பாவாய் பொன் மாலை சூடிடும் பூவாய் ம்ம்ம்... பெண் பாவாய் ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... *****
4. தூரத்தில் நான் கண்ட உன் முகம்
படம் : நிழல்கள் (1980) இசை : இளையராஜா பாடலாசிரியர் : வைரமுத்து பாடியவர்கள் : எஸ்.ஜானகி வீடியோ ஆஆஆ.. ஆஆஆ.. ஆ.. தூரத்தில் நான் கண்ட உன் முகம் நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம் தூரத்தில் நான் கண்ட உன் முகம் நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம் சுகம் நூறாகும் காவியமே.. ஒரு சோகத்தின் ஆரம்பமே இது உன்னை எண்ணிப் பாடும் ராகம் ம்ம்... தூரத்தில் நான் கண்ட உன் முகம் நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம் ஆஆ ஆஆ.. ஆஆ ஆஆ.. ஆஆ ஆஆ ஆஆ... ஆஆ.. ஆஆஆ ஆஆஆ... வேய்ங்குழல் நாதமும் கீதமும்... ஆஆஆஆ.. ஆஆஆஆ... ஆஆஆ ... வேய்ங்குழல் நாதமும் கீதமும் மையலின் ஏக்கமும் தாபமும் மாயன் உனது லீலை இதுவே ஐயன் உன் தஞ்சம் என் நெஞ்சமே தினம் அழைத்தேன் பிரபு உனையே பாடும் பாட்டிலே புது ராகம் தோன்றுமா தூரத்தில் நான் கண்ட உன் முகம் நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம் காதல் எனும் கீதம் பாடி உருகும் ஒரு பேதையான மீரா மீரா.. மீரா.. மீரா.. மீரா.. வேளை வரும்போது வந்து காக்கும் கரம் காக்கும் என்று வீணை மீட்டும் தேவி உள்ளமே தீராத ஆசையோடு வாடாத பூக்களோடு காலை மாலை பூஜை செய்தும் கேட்கவில்லையா கனவு போல வாழ்வில் எந்தன் தான னான னான னான... கவலை யாவும் மாற வேண்டும் தான னான னான னான... கனவு போல வாழ்விலெந்தன் கவலை யாவும் மாற வேண்டும் இரக்கமும் கருணையும் உனக்கில்லையோ நாளும் எனை ஆளும் துணை நீயே என வாழ்ந்தேன் மறவேன்... மறவேன்... மறவேன்... உன் நினைவுகள் என்னிடம் தினம் உறவின் பெருமை மறவேன் வரும் விதி தரும் அதில் உறவுகள் பிரிவதும் ஒரு சுகம் வானமும் மேகமும் போலவே... வானமும் மேகமும் போலவே... நீந்திய காலங்கள் ஆயிரம் மேகம் மறைந்த வானில் தனிமை இன்று நான் கண்டதும் உண்மையே தினம் அழைத்தேன் பிரபு உனையே ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா தூரத்தில் நான் கண்ட உன் முகம் நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம் ம்ம்ம்... |