http://www.tamilthiraiulagam.com

Our Latest Online Publications: Pon Vilangu - Chapter - 63 (Naa.Parthasarathy) -- Our CDs : -- -- -- Our Books : -- -- -- Our Websites : www.chennainetwork.com - www.chennailibrary.com - www.samaiyalarai.com - www.tamilthiraiulagam.com - www.inbasutrula.com - www.siruvarulagam.com - www.wowcricket.com - www.indiainfolibrary.com - www.kovainetwork.com - www.madurainetwork.com - www.trichynetwork.com - www.nellainetwork.com - www.salemnetwork.in - www.gowthampathippagam.com
திரை உலக தகவல்கள்
தமிழ் திரை உலகம்



சுப்பிரமணியபுரம்

இசை: ஜேம்ஸ் வசந்தன்
இயக்குனர்: சசிகுமார்

பாடல்: கண்கள் இரண்டால்

பாடியவர்கள்: பெல்லி ராஜ், தீபா மரியம்
பாடலாசிரியர்: தாமரை

பல்லவி

ஆ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
     என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்
     சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
     என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
     (கண்கள் இரண்டால் உன்)

பெ: பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்
     பின்பு பார்வை போதும் எனநான் நினைத்தே நகர்வேனே மாற்றி
     கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
     ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
     ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
     இதை இருளிலும் படித்திட முடிகிறதே

சரணம்-1

ஆ: இரவும் அல்லாத பகலும் அல்லாத‌
     பொழுதுகள் உன்னோடு கழியுமா
     தொடவும் கூடாத படவும் கூடாத‌
     இடைவெளி அப்போது குறையுமா

பெ: மடியினில் சாய்ந்திடத் துடிக்குதே
     மறுபுறம் நாணமும் தடுக்குதே
     இதுவரை யாரிடமும் சொல்லாத கதை

ஆ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
     என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்
     சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
     என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

சரணம்-2

பெ: கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத‌
     மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
     உடலும் அல்லாத உருவம் கொள்ளாத‌
     கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்

ஆ: உனையன்றி வேறொரு நினைவில்லை
     இனி இந்த ஊனுயிர் எனதில்லை
     தடையில்லை சாவிலுமே உன்னோடு வர‌

பெ: கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
     ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
     ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
     இதை இருளிலும் படித்திட முடிகிறதே

ஆ: பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்
     பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே
     நகர்வேனே மாற்றி

பெ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
     என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென‌

ஆ: சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
     என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/lyrics/subramaniapuram.html




ஆன்மீகம்
தினசரி தியானம்

எமது வலைதளங்கள்