http://www.tamilthiraiulagam.com

Our Latest Online Publications: Pon Vilangu - Chapter - 63 (Naa.Parthasarathy) -- Our CDs : -- -- -- Our Books : -- -- -- Our Websites : www.chennainetwork.com - www.chennailibrary.com - www.samaiyalarai.com - www.tamilthiraiulagam.com - www.inbasutrula.com - www.siruvarulagam.com - www.wowcricket.com - www.indiainfolibrary.com - www.kovainetwork.com - www.madurainetwork.com - www.trichynetwork.com - www.nellainetwork.com - www.salemnetwork.in - www.gowthampathippagam.com
திரை உலக தகவல்கள்
தமிழ் திரைப்படங்கள்



வெடிகுண்டு முருகேசன்

நடிப்பு
பசுபதி, ஜோதிர்மயி, வடிவேலு, தீபா, கே.ஏ. குணசேகரன், டி.பி. கஜேந்திரன், நிர்மலா பெரியசாமி, வீரா, ரனீஷ்

படத்தொகுப்பு
பிரவீன் K.L., ஸ்ரீகாந்த் N.B.

கலை
ஜே.பி

பாடல்கள்
யுகபாரதி, ஏக்நாத்

நடனம்
சிவசங்கர், தினேஷ், காதல் கந்தாஸ்

ஒளிப்பதிவு
பாலபரணி

சண்டை
சூப்பர் சுப்பராயன்

இசை
தினா

எழுத்து, இயக்கம்
மூர்த்தி

தயாரிப்பு
P.S. கணேஷ், M. செந்தில்குமார்

     ராஜபாளையம் கடைத்தெருவில் கைவண்டி வைத்துக் கொண்டு ஊரில் இருக்கும் டீக்கடைகளுக்கு தண்ணீர் ஊற்றி பிழைப்பு நடத்தி வருபவர் வெடிகுண்டு முருகேசன் (பசுபதி). தன்னுடன் படித்த மனநிலை சரியில்லாத பொன்னியையும் (தீபா) தன்னுடன் வைத்துக் காப்பாற்றி வருகிறார். சின்னச் சின்ன வழக்குகளில் சிறைக்குச் சென்று வரும் முருகேசனின் நல்ல மனதைப் பார்த்து அவரை காதலிக்கிறார் போலிஸ்காரரான நாச்சியார் (ஜோதிர்மயி). இதற்கிடையில் பொன்னியை வில்லனின் தம்பி கொடஞ்சான் (ரினீஷ்) பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறார். நியாயம் கேட்கும் முருகேசனை கொல்லும் முயற்சியில் செத்தும் போகிறார் கொடஞ்சான். தம்பியின் சாவுக்கு பழி வாங்கத் துடிக்கும் வில்லனிடம் இருந்து முருகேசன் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை.

     சரியும் தவறும் கலந்த சாதரண மனிதனாக அறிமுகமாகும் பசுபதி டீ கடைகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது, நடுத்தெருவில் நின்று குடிப்பது, நீதிமன்றத்திலும் போலீஸ் ஸ்டேஷனிலும் பஞ்ச் டயலாக்குகளையும், கருத்துக்களையும் பேசுவது என வெளுத்துக்கட்டுகிறார் மனிதர். மனநிலை சரியில்லாத பெண்ணைக் காப்பாற்றும் காட்சியில் உருக வைக்கிறார். நகைச்சுவை காட்சிகளில் பின்னி எடுக்கிறார்.

     போலீஸ வேலைக்கு போகப் பிடிக்காமல் பொசுக் பொசுக்கென்று அழுபவராக ஜோதிர்மயி. அழுகை, சிரிப்பு, டூயட் என எல்லாவற்றையும் சரிவர செய்திருக்கிறார்.

     அலர்ட் ஆறுமுகமாக வரும் வடிவேலு ஆரம்பத்தில் ஏனோதானோவென துவங்கினாலும் முடிவில் வெளுத்துக்கட்டுகிறார். போலீஸ இன்ஸ்பெக்டரின் பேண்டுக்குள் கையை விட்டு மாட்டிக் கொள்ளும் காட்சியில் தியேட்டர் குலுங்குகிறது. ஆனால், ஒரே ஒருகாட்சியில் மட்டும் தான் பசுபதியும் வடிவேலுவும் சந்திக்கிறார்கள். வடிவேலுவின் காட்சிகளை மட்டும் தனியாக எடுத்துச் சேர்த்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

     பொன்னி என்னும் மனநிலை சரியில்லாத பெண்ணாக நடித்து இருக்கும் தீபா கொடுத்த வேலையை சரியாகச் செய்து இருக்கிறார். செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி நீதிபதியாக நடித்து இருக்கிறார். இனி பல படங்களில் இவரைப் பார்க்கலாம். வில்லன்கள் வீரா, ரனீஷ் இருவருமே இது ஒரு காமெடி படம் என்பதைப் புரிந்துகொண்டு நடித்திருக்கிறார்கள்.

     தினாவின் இசையில் சாரலே பாட்டு மட்டும் பரவாயில்லை. பின்னணி இசை தான் காதை கிழிக்கிறது.

     படத்தில் வசனங்கள் அருமை. பல நல்ல விஷயங்களை சிரித்துக் கொண்டே சொல்கிறார்கள். உதாரணமாக கடைக்கு வந்த சிறுமியை சணல் வாங்க அனுப்பிய கடைக்காரரை சிறுமியின் அப்பா கடிந்து கொள்ளும் போது முருகேசன் சொல்லும் அறிவுரைக்கு தியேட்டரில் எழும் கைதட்டல் இதற்கு சாட்சி. வசனம் எழுதி இயக்கி இருக்கும் மூர்த்திக்கு ஒரு சபாஷ்.

     நல்ல நடிகர் தேர்வு, நறுக்கான வசனங்கள், முழுக்க முழுக்க காமெடி என தற்போதைய படங்களில் சிறந்த பொழுதுபோக்குப் படமாக திகழ்கிறது 'வெடிகுண்டு முருகேசன்' படம்.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2009/vedigundumurugesan.html




ஆன்மீகம்
தினசரி தியானம்

எமது வலைதளங்கள்