http://www.tamilthiraiulagam.com

கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள் - இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) -- பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) -- உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) -- இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - எமது குறுந்தகடுகள் - அமரர் கல்கியின் படைப்புக்கள் (குறுந்தகடு) (விலை ரூ.199) -- புதுமைப்பித்தன் சிறுகதைகள் (குறுந்தகடு) (விலை ரூ.99) -- தமிழ் புதினங்கள்-1 (குறுந்தகடு) (விலை ரூ.99) -- தொடர்புக்கு: 96888-29900, 90422-76544, 98947-62888, 94440-86888
திரை உலக தகவல்கள்
-திரைப்பட நகருக்கு கருணாநிதி அடிக்கல்
-ஜெயம் ரவியின் அடுத்த படம் பூலோகம்
-ஒரே நேரத்தில் 7 படத்தில் பூர்ணா
-நடிகர் சூர்யா - ஒரு பார்வை
-நடிகை த்ரிஷா - ஒரு பார்வை







தமிழ் திரைப்படங்கள்



நான் கடவுள் (தொடர்ச்சி)

     அகோரி சன்யாசிகளைப் பற்றியும், பிச்சைக்காரர்களின் வாழ்வு பற்றியும் மிக ஆழமாகச் சிந்திக்க வைத்திருப்பது இந்தப் படத்தின் வெற்றி. பிச்சைக்காரர்களைக் கேலிப் பொருளாக்காமல், அவர்களது உலகை யதார்த்தமாகக் காண்பிக்கிறது. உண்மையான பிச்சைக்காரர்களையே கொண்டு, எந்தவித சமரசங்களும் செய்யாமல் காண்பிக்க முயன்றது இந்தப் படத்தின் வலு.

     இந்தியா போன்ற வறுமை நிறைந்த நாட்டில், உடல் ஊனமுற்றோரும், மன நோயாளிகளும் ஆதரவற்றோரும் வேறு எந்த நாட்டையும்விட அதிக எண்ணிக்கையில் இருக்கும் நிலையில் எந்த விதமான அரசாங்க உதவியும் அவர்களைக் காக்க முடியாது. இந்தியாவில் அவர்களுக்குப் பாதுகாப்பை வழங்குவது நம் பண்பாடும், நம்பிக்கைகளும், தர்மம் தலைகாக்கும் என்ற இந்து தர்மமும்தான் என்பதை உணர்த்துகிறது இப்படம்.

     படத்தில் நடித்த அனைவரையும் கௌரவிக்கலாம். வசன உச்சரிப்பு, விழியசைவு, உடலசைவு, திரும்புதல், பார்த்தால், நடப்பது, ஓடுவது என எல்லா விதத்திலும் முழுமையாகச் செய்திருக்கிறார் ஆர்யா. பூஜா என்கிற அம்சவல்லி கண் பார்வையில்லாதவராக நடிப்பில் உருக்கியிருக்கிறார். அதிலும் கடைசிக் காட்சியில் அவருடைய நீண்ட வசனமும், பேசும்விதமும் உருக்கத்தைக் கொடுக்கிறது. ஆர்யாவோ பூஜாவோ படத்தில் தெரிய மாட்டார்கள் ருத்ராவாகவும் அம்சவள்ளியாகவும் அவர்கள் மாறி இருக்கிறார்கள்.

     படத்தின் ஜீவன் உடல் ஊனமுற்ற, மனநிலை குன்றிய, குரூர முகம் கொண்ட அந்த ஜீவன்கள்தாம். பிரமாதமான நடிப்பு. ஒவ்வொரு முகமும் வாழ்நாளில் மறக்க முடியாதபடி நிரந்தரமாகப் பதிந்து விடுகிறது. குடும்பங்களற்ற அந்த மனிதர்கள் அங்கே குடும்பமாய் பிணைக்கப்பட்டிருப்பதும், அவர்களது கிண்டல் பேச்சுக்களும் நம்மை ஒருவிதத்தில் ஆசுவாசப் படுத்துகின்றன.

     உடல் குன்றிய மனிதர்களை கடத்தி வந்து பராமரிக்கும் அவரே இரவில் பாட்டில் வாங்கி வந்து, குடித்து அவர்களோடு அடிக்கும் லூட்டிகள், போதையேறி அவர் நிதானமிழந்ததும் அவர்கள் அவரை வைத்து செய்யும் கிண்டல்கள், தமிழில் அபூர்வமான காட்சிகள். போலீஸ் கான்ஸ்டபிள் ஒரு சவுண்ட்டிற்கே கக்கத்தில் தொப்பியை வைத்துக் கொண்டு ஓடி வந்து விழுவது.. கோர்ட்டில் நீதிபதி இன்ஸ்பெக்டரை எடக்கு, மடக்காகக் கேள்வி கேட்பது என பாலாவின் டச் ஆங்காங்கே தெரிகிறது. எங்கிருந்தோ வந்தவர்கள் ஒன்று கூடி ஒரே கோவில் வாசலில் பிச்சை எடுக்க, இரவு வந்ததும் ஒரே அறையில் எல்லோரும் அமர்ந்து அரட்டைகள் அடிப்பதும், பின் விடிந்ததும் எல்லோரும் பிச்சை எடுக்க போவதும் என அவர்களின் வித்தியாச வாழ்க்கையை சமரசம் இல்லாமல் அப்படியே தந்திருக்கும் பாலாவுக்கு சபாஷ்!

     பாதாளக் கோவிலின் லைட்டிங், சுடுகாட்டு நெருப்பின் ஜுவாலைகள், நதியின் பாய்ச்சல், சண்டைக் காட்சிகளின் வேகம், வித்தியாசமான கலர் மற்றும் லைட்டிங்கில் போலீஸ் ஸ்டேஷன், என ஆர்தர் வில்சனின் கேமரா காட்டும் அனைத்தும் அருமை. இளையராஜா பின்னணி இசையில் தன் முத்திரையை பதித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு இளையராஜாவின் இசை ஒரு தூண். ஜெயமோகன் வசனங்கள் படத்தோடு சேர்ந்திருக்கின்றன.

     நாயரின் பிணத்தை அகோரி என்ன செய்தார் என்பது பார்வையாளர்களுக்குப் புரியாமலேயே போய் விடுகிறது. அம்சவல்லி எப்படி கன்னிகாஸ்தீரிகளிடம் அடைக்கலமாகி மதம் மாற்றப்படுகிறார், எப்படி அங்கிருந்து வெளிவருகிறார் என்பவையெல்லாம் வெட்டப்பட்டுள்ளன. பந்தங்களை அறுத்தெறிந்து விட்டு வரும்படி குரு ருத்ரனைச் சொல்லி அனுப்புகிறார். அதை எப்படி ருத்ரன் செய்தார் என்பது குறித்து எந்தவிதமான காட்சிகளும் இல்லை. கதை நிகழும் நிலப்பரப்பை இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஊரற்ற, பேரற்ற வெளியாக இருக்கட்டும் என நினைத்திருக்கலாம். இந்தச் சிறுசிறு குறைகளை மீறியும் இந்தப் படம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதில் சந்தேகமில்லை.

     படம் பார்த்தவர்களைப் பல நாட்கள் உறக்கம் இல்லாமல் செய்துவிடக் கூடிய வலுவான பாத்திரங்கள், காட்சி அமைப்புகள். சந்தேகமில்லாமல் உக்கிரமான ஒரு நல்ல படம்.





இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2009/naankadavul2.html



ஆன்மீகம்
தினசரி தியானம்

கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள்
எமது குறுந்தகடுகள் (CDs)

சென்னைநூலகம்.காம்
சமையல்அறை.காம்
இன்பசுற்றுலா.காம்
அண்ணா சதுக்கம்
ஆழியாறு அணை
எம்.ஜி.ஆர். நினைவிடம்
ஒகேனக்கல் அருவி
கபாலீஸ்வரர் கோவில்
கல்லணை
குற்றாலம் அருவி
கொல்லி மலை
கோடிக்கரை
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயில்
பவானி சாகர் அணை
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
முண்டன்துறை
மெரினா கடற்கரை
மேட்டூர் அணை
வள்ளுவர் கோட்டம்
வேடந்தாங்கல்
வைகை அணை
சிறுவர்உலகம்.காம்