http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





நான் கடவுள்

நடிப்பு
ஆர்யா, பூஜா, பாரதி, ரஞ்சனி, கிருஷ்ணமூர்த்தி, முரளி, திருநங்கை B. கீர்த்தனா

படத்தொகுப்பு
சுரேஷ் அர்ஸ்

கலை
பி. கிருஷ்ணமூர்த்தி

பாடல்கள்
வாலி, இளையராஜா, பரத் ஆச்சார்யா

ஒளிப்பதிவு
ஆர்தர் ஏ. வில்சன்

சண்டை
சூப்பர் சுப்பராயன்

வசனம்
ஜெயமோகன்

இசை
இளையராஜா

கதை, திரைக்கதை, இயக்கம்
பாலா

தயாரிப்பு
கே.எஸ். சீனிவாசன்

     தான் பெற்ற மகனால் குடும்பத்திற்கு ஆகாது என்று நான்கு ஜோதிடர்கள் கூறியதால் மகன் ருத்ரனை காசியில் கொண்டு போய் தொலைத்துவிட்டு வருகிறார் அப்பா நமச்சிவாயம். 14 வருடங்களுக்குப் பிறகு குற்றவுணர்வு துரத்த மகனைத் தேடி காசிக்கு வருகிறார். பாவம் கரைக்கவரும் மக்கள், ஆற்றில் எ‌ரியும் சிதை இவற்றுக்கு நடுவே தவக்கோலத்தில் மகனைக் கண்டுபிடிக்கிறார்.

     சுற்றம் துறந்த அகோரித் துறவியாக உள்ளான் மகன் ருத்ரன். "அகோரிக்கு உறவு கிடையாது, அதை அறுத்துவிட்டு வந்து சேர்" என அறிவுரை சொல்லி ஊருக்கு அனுப்பி வைக்கிறார் ருத்ரனின் குரு.

     ஊருக்கு வந்த பிறகும் வீட்டோடு ஒட்டாமல் இருக்கிறான். இது குடும்பத்தினருக்கு மன வருத்தம் தந்தாலும், அவன் மீண்டும் தங்களுடன் சேர்ந்து வாழ மாட்டான் என்பதை உணர்ந்து அவனை அப்படியே விட்டு விடுகிறார்கள்.

     ருத்ரன் மலைக்கோவிலில் கஞ்சா கிடைப்பதை அறிந்து அங்கேயே தங்கிவிட, சடை வளர்த்து ஊரை ஏமாற்றி கோவிலுக்குள் இருந்து வரும் போலிச் சாமியார்கள் ருத்ரனின் மந்திரங்களையும் தோற்றத்தையும் பார்த்து, இவன் உண்மையிலேயே சாமி தான் என எண்ணி, சாமிக்கு சிஷ்யராகிறார்கள். சாமியும் கஞ்சாவை மட்டும் உணவாய்க் கொண்டு தியானம் செய்து வருகிறார்.

     உடல் ஊனமுற்றவர்களையும் மூளை வளர்ச்சி குறைந்தவர்களையும், உறவற்றவர்களையும் பிச்சைக்காரர்களாக்கி தொழில் செய்து வருகிறான் தாண்டவன். அவனிடம் சிக்கிக் கொள்கிறாள் பாட்டுப் பாடி பிழைப்பு நடத்தும் கண் தெ‌ரியாத அம்சவல்லி. தாண்டவன், முக அழகு குறைந்த ஒருவனுக்கு அவளை விற்க முயல்கிறான். உடனிருப்பவர்கள் அவளைக் காப்பாற்றுகிறார்கள். பாதுகாப்பு தேடி அவள் ருத்ரன் இருக்கும் மலைக்கோயிலை அடைகிறாள். அவளை விற்க முயன்ற இடைத்தரகரைக் கொன்று பாதுகாப்பு அளிக்கிறான் ருத்ரன்.

     இதனால் கொலை வழக்கில் கைதாகி ருத்ரன் நீதிமன்றம் கொண்டு செல்லப்படுகிறான். காவலர்களால் அவன் தான் குற்றவாளி என்று நிரூபிக்க இயலாமல் போகிறது. மேலும் அவனை தாண்டவனிடம் மாட்டி விட நினைக்கும் காவலர்கள் வழக்கில் இருந்து அவனை விடுவிக்கின்றனர்.

     இதற்கிடையே குரூபி உடன் செல்ல மறுக்கும் அம்சவல்லி மேல் தாண்டவன் கோபம் கொண்டு அவளைக் கொடூரமாகத் தாக்க, அவள் அடைக்கலம் தேடி ருத்ரனிடம் செல்கிறாள். தாண்டவனும் அங்கு வர, தாண்டவனைக் கொல்கிறான் ருத்ரன். மிகவும் மனமொடிந்த அம்சவல்லி, இந்தப் பிறப்பில் இருந்து விடுபடக் கோரி ருத்ரனிடம் மன்றாட, அவளைக் கருணைக் கொலை செய்கிறான். பிறகு, தனது குருவைத் தேடி மீண்டும் காசிக்குச் செல்கிறான் ருத்ரன்.




இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2009/naankadavul.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs