http://www.tamilthiraiulagam.com

Our Latest Online Publications: Pon Vilangu - Chapter - 63 (Naa.Parthasarathy) -- Our CDs : -- -- -- Our Books : -- -- -- Our Websites : www.chennainetwork.com - www.chennailibrary.com - www.samaiyalarai.com - www.tamilthiraiulagam.com - www.inbasutrula.com - www.siruvarulagam.com - www.wowcricket.com - www.indiainfolibrary.com - www.kovainetwork.com - www.madurainetwork.com - www.trichynetwork.com - www.nellainetwork.com - www.salemnetwork.in - www.gowthampathippagam.com
திரை உலக தகவல்கள்
தமிழ் திரைப்படங்கள்



பஞ்சாமிர்தம்

நடிப்பு
பிரகாஷ் ராஜ், நாசர், ஜெயராம், சரண்யா மோகன்

இசை
சுந்தர் சி பாபு

இயக்கம்
ராஜூ ஈஸ்வரன்

தயாரிப்பு
அபிராமி ராமநாதன்

     விடுமுறைக் காலம் என்பதால், குழந்தைகளைக் குறிவைத்து ரிலீஸ் பண்ணியிருக்கிறார்கள் பஞ்சாமிர்தம் படத்தை. இந்த டெக்னிக் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

     கதை ராமாயண காலத்திலிருந்து தொடங்குகிறது.

     குருவின் மகளை யார் காதலிப்பது என்பதில் மாரீசனுக்கும், இடும்பனுக்கும் மோதல். இதில் இடும்பனை வீழ்த்தி காலில் தண்டையாக மாட்டி வெற்றி கொள்கிறான் மாரீசன். இராவணன் உத்தரவுப்படி சீதையை கவர பொன்மான் வேடமிடும் மாரீசன் ராமனால் கொல்லப்பட்டு பூமியில் புதைந்து மலையாகிறான். இது முன் ஜென்ம கதை.

     இந்தக் கதை அப்படியே 21ம் நூற்றாண்டுக்கு தாவுகிறது.

     எஸ்டேட் அதிபர் நாசரை ஏமாற்றி அவரது சொத்துக்களை பறிக்க முயலும் உறவினர்களிடமிருந்து அவரைக் காக்க வருகிறார் சொந்தபர் பேத்தியான சரண்யா மோகன்.

     நாசர் அப்பாவின் தாலி கட்டாத மனைவியின் மகன் இன்னொரு நாசர். இவர் மீனவர். இவரும் நாசரிடமிருந்து சொத்தை பறிக்க வருகிறார். உறவுக்காரர்கள் சரண்யா மோகனை தீர்த்துக் கட்ட மலையில் இருந்து தள்ளிவிடுகிறார்கள். விழும்போது அவர் பாதம்பட்டு பாவ விமோசனம் பெறுகிறார் மாரீசன். தன் கதையை கூறி சரண்யாவின் நண்பனாகிறார். மாரீசனின் காலில் இருந்து கழன்று விழும் தண்டம் மீனவ நாசர் கையில் கிடைக்கிறது. அதிலிருந்து வரும் இடும்பன் நாசருக்கு உதவுகிறார்.

     மனிதர்களின் பகையை வைத்து, தங்கள் சொந்தப் பகையை தீர்த்துக் கொள்ள மோதுகிறார்கள் மாரீஸனும் இடும்பனும்.

     மாயாவி மாரீஸன் என்ற தொடர்தான் படமாகியுள்ளது. ஆனால் சீரியலை விட இதில் சிரிப்பும் அதிகம், படமாக்கமும் அருமை.

     ராவணனாக வந்து கதையை தொடங்கி வைத்து மறைகிறார் பிரகாஷ்ராஜ். மாரீசனாக ஜெயராம். இடும்பனாக படத்தின் இயக்குநர் ராஜூ ஈஸ்வரன், மந்தாகினியாக சமிக்ஷா. இன்றைய நடிகர்களை இப்படி மாறுபட்ட வேடத்தில் பார்ப்பதே சுவாரஸ்யமாக இருக்கிறது.

     ஜெயராமுக்கும், ராஜூ ஈஸ்வருக்கும் நடக்கும் மோதல் சுவாரஸ்யமாகவே உள்ளது. இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் இருப்பதே தெரியவில்லை படத்தில். இப்படிப்பட்ட படங்களுக்கு அப்படித்தான் இருக்க வேண்டும்.

     முதல் படத்திலேயே குழந்தைகள் மனதில் இடம்பிடிப்பது போன்ற க்ளீன் எண்டர்டெயின்மெண்ட் தந்துள்ள அபிராமி ராமநாதனைப் பாராட்டத்தான் வேண்டும்!



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2008/panchamirtham.html




ஆன்மீகம்
தினசரி தியானம்

எமது வலைதளங்கள்