http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





காத்தவராயன்

நடிப்பு
கரண், விரிஷா, வடிவேலு, தண்டபாணி, இளவரசு

ஒளிப்பதிவு
கார்த்திக்ராஜா

இசை
ஸ்ரீகாந்த் தேவா

இயக்கம்
சலங்கை துரை

தயாரிப்பு
சில்வர் ஜூப்ளி பிலிம்ஸ்

     சாராயம் காய்ச்சும் தொழிலையே நேர்மையாக செய்பவர் கரண். அதனால் அவர் வியாபாரம் வளர, போட்டியாளரான காதல் தண்டபாணியின் வியாபாரம் தேய்கிறது. இதனால் தொழில் போட்டி வளருகிறது.

     இச்சமயத்தில் போதை எதிர்ப்பு பிரசாரத்திற்கு கிராமத்திற்கு வரும் விதிஷா மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். கரணிடம் சாராயம் காய்ச்சுவதை நிறுத்த வேண்டுகிறார். கடைசியில் கரண், சிறை செல்ல காரணாமாகிறார்.

     சென்னையில் ஒரு போதை கும்பலை பிடித்துக் கொடுக்க முயற்சி செய்கிறார் விதிஷா. ஆனால் அவர்கள் விரித்த வலையில் சிக்கிக் கொண்டு போதை மருந்தை வைத்திருக்கும் குற்றத்திற்காக சிறைக்குச் செல்கிறார்.

     கரண் சிறையிலிருந்து வெளியே வந்ததும் விதிஷாவை பழி தீர்க்க புறப்படுகிறார். யாரைப் பழிதீர்க்கப் போனோமோ அவரையே காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் மாட்டும் கரண் விதிஷாவை எவ்வாறு வெளியே கொண்டுவருகிறார்? இவர்கள் இருவருக்கும் இடையே இருப்பது காதலா - பகையா? கரணை உண்மையில் ஜெயிலுக்குள் தள்ளியது விதிஷா தந்த புகாரா? இல்லை கரணின் எதிரிகளின் வேலையா போன்ற கேள்விகளுக்கான விடை படத்தின் இறுதியில் தெரிய வருகிறது.

     இப்படத்தில் கரணின் நடிப்பு பாராட்டுதற்குரியது. சாராயம் காய்ச்சும் முரட்டு ஆசாமி கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் கரண். அவரது கோவை பாஷை குறிப்பிடத்தக்கது.

     புதுமுகம் விதிஷாவுக்கு முதல் படத்திலேயே நடிக்க நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறார் இயக்குனர். விதிஷாவும் சொன்னதைச் சரியாக செய்துள்ளார். நாயகி விதிஷா ஓரளவு மிளிருகிறார்.

     பாட்டியின் இன்சூரன்ஸ் மூன்று லட்ச ரூபாயை கந்து வட்டிக்கு விட்டு, கண்டபடி மொத்து வாங்குகிறார் வடிவேலு.

     ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் ரொம்ப சுமார். கார்த்திக்ராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். சலங்கை துரையின் இயக்கம் முழு அளவில் வெளிப்படவில்லை என்று தான் கூறவேண்டும்.

     விஷச்சாராய சாவுகள் அடிக்கடி நிகழுவதால் இம்மாதிரி படங்கள் அவசியம் தேவை.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2008/kathavarayan.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs