http://www.tamilthiraiulagam.com
செய்திகள்
-14 ஆண்டுகளுக்கு பின் திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேகம்
-உயர்நீதிமன்ற நீதிபதியை நான் மிரட்டவில்லை - ராஜா மறுப்பு
-அரசு பஸ்களில் விரைவில் மூட்டைப் பூச்சிக்கு முடிவு: நேரு
-ஒகேனக்கல் குடிநீர் திட்ட பிரச்சனையை பேசி தீர்ப்போம்-எடியூரப்பா
-பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து? - ஜெ. கண்டனம்
-சென்னை: ரயிலில் வெடிகுண்டு-புரளி கிளப்பிய என்ஜினியர் கைது
-எண்ணூர்,தூத்துக்குடி துறைமுகங்களில் சரக்குபெட்டகமுனையம்:வாசன்
-கிழக்கு கடற்கரை சாலையில் பஸ்கள் மோதல்:5 பேர் பலி, 16 பேர் காயம்
-அம்பேத்கார் பல்கலைக்கு சென்னை அருகே 15 ஏக்கம் நிலம்
-உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி பயிற்சி டாக்டர்கள் ஸ்டிரைக்
-மாநிலம் தோறும் கமாண்டோ படை அமைக்க முடிவு: சிதம்பரம்
-நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்
-ஓரினச் சேர்ககையாளர்களின் உறவு தவறில்லை - டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு
-குறைந்த விலையில் மருந்து-ராஜிவ்காந்தி மருந்து திட்டம்:அழகிரி
-இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் - சிரஞ்சீவி
-கத்தார் நாட்டில் படகு கவிழ்ந்து 16 இந்தியர் பலி
திரை உலக தகவல்கள்

தமிழ் திரைப்படங்கள்



காத்தவராயன்

நடிப்பு
கரண், விரிஷா, வடிவேலு, தண்டபாணி, இளவரசு

ஒளிப்பதிவு
கார்த்திக்ராஜா

இசை
ஸ்ரீகாந்த் தேவா

இயக்கம்
சலங்கை துரை

தயாரிப்பு
சில்வர் ஜூப்ளி பிலிம்ஸ்

     சாராயம் காய்ச்சும் தொழிலையே நேர்மையாக செய்பவர் கரண். அதனால் அவர் வியாபாரம் வளர, போட்டியாளரான காதல் தண்டபாணியின் வியாபாரம் தேய்கிறது. இதனால் தொழில் போட்டி வளருகிறது.

     இச்சமயத்தில் போதை எதிர்ப்பு பிரசாரத்திற்கு கிராமத்திற்கு வரும் விதிஷா மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். கரணிடம் சாராயம் காய்ச்சுவதை நிறுத்த வேண்டுகிறார். கடைசியில் கரண், சிறை செல்ல காரணாமாகிறார்.

     சென்னையில் ஒரு போதை கும்பலை பிடித்துக் கொடுக்க முயற்சி செய்கிறார் விதிஷா. ஆனால் அவர்கள் விரித்த வலையில் சிக்கிக் கொண்டு போதை மருந்தை வைத்திருக்கும் குற்றத்திற்காக சிறைக்குச் செல்கிறார்.

     கரண் சிறையிலிருந்து வெளியே வந்ததும் விதிஷாவை பழி தீர்க்க புறப்படுகிறார். யாரைப் பழிதீர்க்கப் போனோமோ அவரையே காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் மாட்டும் கரண் விதிஷாவை எவ்வாறு வெளியே கொண்டுவருகிறார்? இவர்கள் இருவருக்கும் இடையே இருப்பது காதலா - பகையா? கரணை உண்மையில் ஜெயிலுக்குள் தள்ளியது விதிஷா தந்த புகாரா? இல்லை கரணின் எதிரிகளின் வேலையா போன்ற கேள்விகளுக்கான விடை படத்தின் இறுதியில் தெரிய வருகிறது.

     இப்படத்தில் கரணின் நடிப்பு பாராட்டுதற்குரியது. சாராயம் காய்ச்சும் முரட்டு ஆசாமி கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் கரண். அவரது கோவை பாஷை குறிப்பிடத்தக்கது.

     புதுமுகம் விதிஷாவுக்கு முதல் படத்திலேயே நடிக்க நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறார் இயக்குனர். விதிஷாவும் சொன்னதைச் சரியாக செய்துள்ளார். நாயகி விதிஷா ஓரளவு மிளிருகிறார்.

     பாட்டியின் இன்சூரன்ஸ் மூன்று லட்ச ரூபாயை கந்து வட்டிக்கு விட்டு, கண்டபடி மொத்து வாங்குகிறார் வடிவேலு.

     ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் ரொம்ப சுமார். கார்த்திக்ராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். சலங்கை துரையின் இயக்கம் முழு அளவில் வெளிப்படவில்லை என்று தான் கூறவேண்டும்.

     விஷச்சாராய சாவுகள் அடிக்கடி நிகழுவதால் இம்மாதிரி படங்கள் அவசியம் தேவை.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2008/kathavarayan.html

பதிப்புரிமை © 2007 தமிழ்திரைஉலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க


ஆன்மீகம் தினசரி தியானம்


தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 தமிழ்திரைஉலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.