|
|
அசோக் குமார் ![]() நடிப்பு
எம்.கே.தியாகராஜ பாகவதர், சித்தூர் வி. நாகையா, எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், ரஞ்சன், பி.கண்ணாம்பா, டி.ஏ.மதுரம்கதை
இளங்கோவன் (தணிகாசலம்)இசை
பாபநாசம் சிவன்இயக்கம்
ராஜா சந்திரசேகர்தயாரிப்பு நிறுவனம்
மதுரை முருகன் டாக்கி பிலிம் கம்பெனிவெளியீடு
7 அக்டோபர் 1941வீடியோ அசோக் குமார், இளங்கோவன் கதை வசனத்தில், ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர், சித்தூர் வி. நாகையா, எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், ரஞ்சன், பி.கண்ணாம்பா, டி.ஏ.மதுரம் மற்றும் பலர் நடித்துள்ளனர். மதுரை முருகன் டாக்கி பிலிம் கம்பெனியால் நியூடோன் ஸ்டுடியோவில் இப்படம் தயாரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். இப்படத்தில் மகேந்திரன் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். போரில் வென்று வந்த தனது மகன் குணாளனை (தியாகராஜ பாகவதர்), தன் இளைய மனைவி திசியரட்சதைக்கு (கண்ணாம்பா) அறிமுகப் படுத்துகிறார் அசோகர் (வி. நாகையா). குணாளனுக்கு விரைவில் யுவராஜ பட்டாபிசேகம் செய்ய எண்ணுகிறார். பட்டாபிசேகத்தின் போது, திசியரட்சதை குணாளன் நெற்றியில் திலகமிடுகிறாள். தன்னையுமறியாமல் அவன்மீது காதல் கொள்கிறாள். அன்றிரவு காஞ்சனமாலையும் குணாளனும் பாடும் காதல் பாட்டு திசியரட்சதையின் காமத்தீயை கிளறுகிறது. தந்தையின் விருப்பப்படி மறுநாள் குணாளன் திசியரட்சதையின் முன் பாடுகிறான். அப்போது, அசோகர் மந்திரியின் அழைப்பிற்கிணங்க வெளியே செல்கிறார். தனித்து விடப்படும் இளையராணி, குணாளனைத் தன் இச்சைக்கு இசையத் தூண்டுகிறாள். குணாளன் மறுக்கிறான். இதனால் அசோகர் வந்ததும், குணாளன் மீது வீண் பழி சுமத்துகிறாள் திசியரட்சதை. குணாளன் நாடு கடத்தப் படுகிறான். குணாளனின் இரு கண்களும் பிடுங்கப்படுகின்றன. கர்ப்பவதியான காஞ்சனமாலாவும் துரத்தப்படுகிறாள். குணாளனும், காஞ்சனமாலையும் ஒரு கிராமத்தில் சந்திக்கிறார்கள். காஞ்சனமாலைக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தையுடன் ஊரூராக பிச்சையெடுக்கிறார்கள். திடீரென்று ஒருநாள் குழந்தை இறந்து விடுகின்றது. மகனின் பிரிவால் மன்னர் அசோகரின் உடல் நலம் குன்றுகிறது. மருத்துவர் சொற்படி, சுவர்ணகிரியில் திசியரட்சதையுடன் வந்து தங்குகிறார் அசோகர். அப்போது பாட்டுப்பாடி பிச்சையெடுக்கும் குணாளனின் குரலைக் கேட்டு, அவர்களை வரவழைத்து உண்மை அறிகிறார் அரசர். திசியரட்சதை நஞ்சருந்தி உயிர் துறக்கிறாள். புத்தபிக்கு உபகுப்தாச்சாரியாரின் (கே. மகாதேவய்யர்) உதவியால் பகவான் புத்தரின் சந்நிதானத்தில் குணாளன் கண்கள் இரண்டையும் பெற, அனைவரும் சுகமாக வாழ்கிறார்கள். இப்படத்தில் மொத்தம் 19 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாபநாசம் சிவன் பாடல்களை இயற்றி இசையமைத்துள்ளார். |